4 வீரர்களுடன் புறப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணுக்கு நாசாவை சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் நள்ளிரவு 12.27 மணிக்கு புறப்பட்டது.
நாசா தனியார் நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் வீரர்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. கடந்த மே மாதம் நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 விண்கலம் சோதனை ஓட்டமாக வெற்றிகரமாக கடந்த மே மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் விண்ணுக்கு மனிதர்களை பத்திரமாக அனுப்பி திருப்பி அழைத்து வரும் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நள்ளிரவு நாசாவின் 4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இந்த விண்கலம் புறப்பட்டது. இதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மைக் பென்ஸ் மற்றும் கரேன் பென்ஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விண்கலத்தில் மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் ஆகிய 3 அமெரிக்கர்கள் மற்றும் ஜப்பானை சேர்ந்த சோய்சி நொகுச்சி ஆகியோர் உள்ளனர். ரெசிலியன்ஸ் எனப்படும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடையும். விண்கலத்தில் பயணம் செய்யும் நால்வரும், ஏற்கெனவே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரு ரஷ்யர்கள், ஒரு அமெரிக்கர் ஆகியோருடன் 6 மாதங்கள் தங்கி ஆய்வு செய்வர்.
You must log in to post a comment.