கவிஞர் வைரமுத்து பிறந்த நாள்
கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை 7 முறை பெற்றுள்ளார். 1980-இல் நிழல்கள் திரைப்படத்தில் – பொன்மாலைப் பொழுது – என்னும் பாடலை முதன்முதலில் எழுதினார். இவர் இளையராஜவுடனும், ஏ.ஆர். ரகுமானுடனும் இணைந்து வழங்கிய பாடல்கள் பல விருதுகளைப் பெற்றுள்ளன. மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியுடன் மிக நெருக்கமாக பழகியவர், அவரது அன்புக்கு பாத்திரமானவர்களில் இவரும் ஒருவராக திகழ்ந்தார்.
.
பிற நிகழ்வுகள்
கி.மு.587 – சாலமோனின் கோயில் இடிக்கப்பட்டதை அடுத்து பாபிலோனின் எருசலேம் முற்றுகை முடிவுக்கு வந்தது.
1174 – கிளர்ச்சியின் முக்கிய கிளர்ச்சியாளர் ஸ்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிராலாந்தின் 2-ஆம் ஹன்றியின் படையினரால் கைது செய்யப்பட்டார்.
1249 – ஸ்காட்லாந்தின் மன்னராக 3-ஆம் அலெக்சாந்தர் முடிசூடினார்.
1643 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் ஹன்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.
1830 – வங்காள மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இசுக்கொட்டிசு சர்ச் கல்லூரி கொல்கத்தாவில் அலெக்சாண்டர் டப் ராசாராம் மோகன் ராய் ஆகியோரால் நிறுவப்பட்டது.
1844 – இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
1863 – நியூயார்க் நகரில் அரசுக்கு எதிரான 3 நாள் கலவரங்கள் தொடங்கின. இதில் 120 பேர் கொல்லப்பட்டனர்.
1869 – இந்துப் பிள்ளைகளின் கல்விக்காக ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
1878 – பெர்லின் உடன்பாட்டை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பால்கன் குடாவின் வரைபடத்தை மாற்றியமைத்தன. செர்பியா, மொண்டேனேகுரோ, ருமேனியா ஆகியன முழுமையாக உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலை அடைந்தன.
1923 – லாஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்டது.
1930 – முதலாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் தொடங்கின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தொடங்கினர்.
1953 – தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பிறந்த நாள்
1971 – மொரோக்கோவில் தோல்வியடைந்த ராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 10 ராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.
1977 – சோமாலியா எத்தியோப்பியா மீது போரை தொடங்கியது.
2011 – தெற்கு சூடான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.
2016 – ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் தனது பதவியைத் துறந்தார் தெரசா மே புதிய பிரதமரானார்.
You must log in to post a comment.