பேருந்து போக்குவரத்து: 8 மண்டலங்களாகப் பிரிப்பு
சென்னை: தமிழத்தில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் திங்கள்கிழமை முதல் செயல்படுத்துவதற்காக போக்குவரத்து மண்டலங்கள் 8-ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டலங்கள் விவரம்:
மண்டலம் 1: கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்.
மண்டலம் 2: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.
மண்டலம் 3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.
மண்டலம் 4: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.
மண்டலம் 5: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்.
மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி.
மண்டலம் 7: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
மண்டலம் 8: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.
இந்த 8 மண்டலங்களில் 7 மற்றும் 8 ஆகியவை தவிர்த்து பிற மண்டலங்களுக்குள் 50 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படும்.
மண்டலம் 7, 8-க்குட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்துக்கு தடை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கலாம். பேருந்துகளின் மொத்த இருக்கைகளில் 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒரு மண்டலத்துக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை. பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.
மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்து சேவைக்கான தடை தொடர்கிறது.
You must log in to post a comment.