கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டோர் சதவீதம் அதிகரிப்பு
புதுதில்லி: நாட்டில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் அதிகரித்து வருவதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவல் இரட்டிப்பாகும் நிலை உள்ளது. இதனால், உலக அளவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது. அதே சமயம் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோர் சதவீதமும் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்ட தகவலில், குணமடைவோர் சதவீதம் 47.76 சதவீதமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,614. இதுவரை நாட்டில் 86,983 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருப்போர் எண்ணிக்கை 89,995-ஆக உள்ளது. இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,164-ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.