பால்- பனீர் கொழுக்கட்டை
தேவையான பொருள்கள்😊
புழுங்கலரிசி – ஒரு கப் சர்க்கரை – முக்கால் கப் காய்ச்சி ஆறவைத்த பால் – 2 கப் தேங்காய்த் துருவல் – அரை கப் பன்னீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன் ஜாதிக்காய்த் தூள் – கால் டீஸ்பூன் நெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு பன்னீர் துருவலைச் சேர்த்து வதக்கவும். அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து .நைஸாக அரைத்தெடுக்க வேண்டும்.
அடிகனமான பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீர், ஒரு கப் பால் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். முறுக்கு குழலில் உளுந்து முறுக்கு அச்சைப்போட்டு மாவை நிரப்பிப் பிழிய வேண்டும்.
நன்கு வெந்து மேலே வந்ததும் எடுத்து. தேங்காய்த் துருவலுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், பால், மீதமுள்ள நெய், பொரித்த கொழுக்கட்டைகள் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அதன் மேலே பன்னீர் துருவலைச் சேர்த்துப் பரிமாறுங்கள்.
You must log in to post a comment.