பஞ்சாப்பில் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க முடிவு
முதல்வர் அமரீந்தர் சிங் அறிவிப்பு
சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும். இருப்பினும் தினமும் 4 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அந்த மாநில முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கரோனா பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த பல மாநிலங்கள் இந்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மே 3 ஆம் தேதிக்கு பிறகு மேலும் 2 இருவாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
இருப்பினும் ஊரடங்கு காலத்தில் தினமும் காலை 7 முதல் 11 மணி வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். கடைகள் திறந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.