தமிழக ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்த தகவல்களை தெரிவிப்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை சந்தித்தார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மேலும் தீவிர தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவை நோய்ப் பரவல் உள்ள பகுதிகளில் கடுமையாக பின்பற்றவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இச்சூழலில் ஆளுநர் மாளிகைக்கு திங்கள்கிழமை சென்ற முதல்வர், ஆளுநரிடம் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவது குறித்து விளக்கம் அளித்தார்.

You must log in to post a comment.