தமிழகத்தில் முடிதிருத்தும் நிலையங்களுக்கு தடை நீடிப்பு
சென்னை: தமிழகத்தில் முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் ஆகியவற்றுக்கான தடை நீடிக்கிறது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் மே 31-ஆம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றில் வேகம் தமிழகத்தில் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
இச்சூழலில் முடித்திருத்தம் செய்யும் நிலையங்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் உள்ளிட்டவை செயல்படுவதற்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
You must log in to post a comment.