தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 11,224-ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224-ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 639 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
நோய் பாதிப்புக்குள்ளானவர்களில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 4,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 6,750 உயர்ந்துள்ளது.
You must log in to post a comment.